`சான்றிதழ் தாமதத்தால் வேலைவாய்ப்பை மறுக்கக்கூடாது'- கலப்புமணம் புரிந்தவருக்கு பணி நியமனம் வழங்க உத்தரவு!

`சான்றிதழ் தாமதத்தால் வேலைவாய்ப்பை மறுக்கக்கூடாது'- கலப்புமணம் புரிந்தவருக்கு பணி நியமனம் வழங்க உத்தரவு!

தாமதமாக சான்றிதழ் வழங்கியதால் பணி நியமனம்  மறுக்கப்பட்ட கலப்புமணம் புரிந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை கடந்த  2015-ம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற திருப்பூரைச் சேர்ந்த இளங்கோ என்பவர், கலப்புமணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்தார். தேர்வில் 115 மதிப்பெண்கள் பெற்ற போதும், எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் மற்றும் கலப்புமணம் புரிந்து கொண்டவருக்கான சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, பணி நியமனத்துக்கு அவர் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

பின்னர், அந்த சான்றிதழ்களை சமர்ப்பித்த அவர்,  தனக்கு ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ,  'சான்றிதழ்களை தாமதமாக சமர்ப்பித்தார் என்பதற்காக வேலைவாய்ப்பு வழங்க மறுக்க முடியாது.  மனுதாரரைவிட குறைவான மதிப்பெண்கள் பெற்றவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதால், மனுதாரரை ஆய்வக உதவியாளராக  நான்கு வாரங்களில்  நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in