ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை குறித்த அறிக்கை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை குறித்த அறிக்கை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தரப்பில்  தெரிவிக்கப்பட்ட தகவல்களை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்றபோது மர்மமான நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும்  கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால், மாநில போலீஸாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த  மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி.-யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது. அந்த குழுவினர் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை 30 பேரிடம்  விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணை நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in