அறநிலையத்துறைக்குத் தேவையான செலவுகளை  கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ள கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி

அறநிலையத்துறைக்குத் தேவையான செலவுகளை கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ள கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி

அறநிலையத்துறைக்குத் தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம்  அதிரடியாக தெரிவித்துள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் கல்லூரிகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்தும் ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த  மனு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர், கோயில் நிதியை  அறநிலையத்துறை  அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும்,  கணினி மயமாக்கல்,  பேருந்து நிலைய விரிவாக்கம்,  மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டுவது போன்றவற்றிற்காக  பயன்படுத்தப்படுவதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை சமர்ப்பித்தார்.

கோயில்களை நிர்வகிப்பதற்காக நிர்வாகக் கட்டணமாக மொத்த வருமானத்தில் 12 சதவீதம் வழங்கப்படும் நிலையில், கோயில் நிதியை அறநிலையத்துறைக்காக பயன்படுத்துவதாகவும், எந்த தயக்கமும் இல்லாமல் கோயில் நிதியை அரசு நிதிபோல பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். சிறப்பு தணிக்கை செய்தால் அத்தனை விஷயங்களும் அம்பலத்துக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, கோயில் நிதியைத்  தேவையில்லாமல் வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியாது. அறநிலையத் துறை செலவுகளுக்கு தொகுப்பு நிதியில் இருந்து தான்  செலவழிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அறநிலையத் துறைக்குத் தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது,  கண்காணிப்பு என்ற பெயரில் கோயில் வளங்களை எடுக்க முடியாது எனவும் கூறி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in