கர்ப்பிணி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட கணவன்: ஒரே சேலையில் இருவர் உயிரை விட்ட பரிதாபம்

கர்ப்பிணி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட கணவன்: ஒரே சேலையில் இருவர் உயிரை விட்ட பரிதாபம்

கர்ப்பிணி மனைவியுடன் ஒரே சேலையில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா, மயிலாடும்பாறையைச் சேர்ந்தவர் பவித்ரா (22). இவர் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்தவர் சவுந்தரராஜன் (25). ஆர்.கே. பேட்டை அருகே கொண்டாபுரம் காலனியை சேர்ந்தவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் பவித்ராவும், சவுந்தரராஜனும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அவர்களது உறவினர்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற ஆர்.கே.பேட்டை போலீஸார், தம்பதியரின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஏன் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in