
தனது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 18ஆண்டு சிறைத்தண்டனை, ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தென்னையா (50). இவர் கடந்த 11.6.2012- ம் தேதி தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வால்பாறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று தென்னையாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 18 ஆண்டு சிறைத்தண்டனை ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமைக்காவலர் சந்திரமோகனை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.