இனி வாரம் கிடையாது; மாதம் ஒருமுறை கையெழுத்திடணும்: சயானின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்றம்

இனி வாரம் கிடையாது; மாதம் ஒருமுறை கையெழுத்திடணும்: சயானின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்றம்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயானின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் இருந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சோலூர்மட்டம் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்த நிலையில், கார் விபத்து ஒன்றில் கனகராஜ் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.f

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி ஒவ்வொரு திங்கட்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி சயான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிபந்தனையை தளர்த்த காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சயான் தரப்பில் கேரளாவில் வசித்து வருவதால் ஒவ்வொரு வாரமும் ஊட்டிக்கு வந்து கையெழுத்திடுவது சிரமமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தி, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in