3 வயது குழந்தையைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்: குடிபோதையில் இருந்த இருவர் கைது

3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம்
3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம்3 வயது குழந்தையைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்: குடிபோதையில் இருந்த இருவர் கைது

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை இருவர் காட்டுப்பகுதிக்குத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள ஃபதேபூர் பெரி பகுதி தெருவில் மூன்று வயது பெண் குழந்தை நேற்று விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த குழந்தை காணாமல் போனது. இதனால் பதறிப்போன குழந்தையின் பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால், குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள், போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து குழந்தையைத் தேடத் தொடங்கினர்.

இந்த நிலையில், குழந்தையின் தாய், பல்வேறு இடங்களில் குழந்தையைத் தேடி அலைந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணி என்பவர், உங்கள் குழந்தையுடன் இருவர் காட்டுப் பகுதிக்குச் செல்வதைப் பார்த்தேன் என்று காணாமல் போன குழந்தையின் தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், உடனடியாக காவல் நிலையத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து ராணி குறிப்பிட்ட காட்டுப்பகுதிக்குச் சென்ற போது, அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

அங்கு சென்று பார்த்த போது காணாமல் போன குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்த குழந்தையின் உடலில் பல இடங்களில் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளம் இருந்ததால் குழந்தையின் தாய் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பினர். அத்துடன் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) சிகிச்சைக்கு அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில் அந்தக் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார், குழந்தை காணாமல் போன பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரண்டு வாலிபர்கள் குழந்தையைத் தூக்கிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், குடிபோதையில் குழந்தையைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.

ராம்நிவாஸ் பனிகா, சக்திமான் சிங் என்ற அவர்கள் இருவரும் பூமி கிரின் என்ற நிறுவனத்தில் குப்பையை மறுசுழற்சி செய்யும் உதவியாளர் பணியில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். டெல்லியில் மூன்று வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in