சகோதரனால் கருவுற்ற 15 வயது சிறுமி வயிற்றில் 5 மாத சிசு; உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சிறுமி கர்ப்பம்
சிறுமி கர்ப்பம்

சகோதரனால் கருவுற்ற 15 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 5 மாத சிசு தொடர்பாக, கேரள உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவிட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த 15 வயதாகும் சிறுமியின் சார்பில், அவரது வயிற்றில் 32 வாரங்களைக் கடந்து வளரும் சிசுவை அழிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஏ.ஏ.ஜியாத் ரஹ்மான் முக்கியத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

’சொந்த சகோதரனின் கருவை சுமந்திருக்கும் 15 வயது சிறுமி பின்னாளில் குழந்தை பெறும்போது, பல்வேறு சமூக மற்றும் உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாவார். அவற்றைக் கருத்தில் கொண்டு, அவரது வயிற்றில் வளரும் 32 வாரங்களைக் கடந்த கருவை மருத்துவ அடிப்படையில் உடனடியாக கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது’ என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக மலப்புரம் மாவட்ட மருத்துவ அலுவலர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர், மஞ்சேரி அரசு மடுத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய தரப்புகளுக்கு, உரிய முறையில் கண்காணிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in