கர்நாடகாவில் நாளை முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!

முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகாவில் நாளை முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!

ஹிஜாப் விவகாரம் மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் தீவிரமடைந்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. இந்த விவகாரம் மாநில உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகளை மீண்டும் திறக்க முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் நாளை முதல் 10-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்கப்படும். அனைத்து மாவட்ட காவல் துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரிடம் அமைதி குழு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளேன். நிலைமையை கண்காணித்த பிறகு உயர்கல்வி மற்றும் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும். 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறந்த பிறகு மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in