'இந்துத்துவா பொய்களால் கட்டமைக்கப்பட்டது' - விமர்சன ட்வீட்டிற்காக நடிகர் கைது

கன்னட நடிகர் சேத்தன் குமார்
கன்னட நடிகர் சேத்தன் குமார்'இந்துத்துவா பொய்களால் கட்டமைக்கப்பட்டது' - விமர்சன ட்வீட்டிற்காக நடிகர் கைது

இந்துத்துவா குறித்து விமர்சனம் செய்து ட்வீட் பதிவிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் பெங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது மதம் மற்றும் மத நம்பிக்கைகளை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் சேத்தன் குமார் மீதான புகாரில், "இந்துத்துவா பொய்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்ற அவரது ட்வீட், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீசார் கைது செய்தனர். தலித் மற்றும் பழங்குடியினர் செயற்பாட்டாளரான நடிகர் சேத்தன் குமார், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

மார்ச் 20 அன்று சேத்தன் குமார் வெளியிட்ட ட்வீட்டில், "சாவர்க்கர்: ராமர் ராவணனை தோற்கடித்து அயோத்தி திரும்பியபோது இந்திய 'தேசம்' தொடங்கியது -> ஒரு பொய்

1992: பாபர் மசூதி ராமர் பிறந்த இடம் —> ஒரு பொய்

2023: உரிகவுடா-நஞ்சேகவுடா திப்புவைக் கொன்ற கொலையாளிகள்—> ஒரு பொய். இந்துத்துவாவை உண்மையால் மட்டுமே தோற்கடிக்க முடியும் ” என்று தெரிவித்திருந்தார்.

அவர் ட்வீட் செய்த சில மணி நேரங்களிலேயே, இந்து ஆதரவு அமைப்புகள் அவர் மீது புகார் அளித்து, ஷேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். முன்னதாக, பிப்ரவரி 2022 ல், ஹிஜாப் வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித்தை விமர்சித்த ட்வீட்டிற்காக நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in