சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!

தொடர் மழை காரணமாகக் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அரைநாள் மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேன்டூஸ் புயல் கரையைக் கடந்த பிறகும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து கொடிண்டிருக்கிறது. இந்நிலையில் கனமழை  காரணமாகத் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை நெமிலி மற்றும் அரக்கோணம்  தாலுகாக்களிலும், காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதுபோல் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காலை பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில் தொடர் மழை காரணமாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதுபோல் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in