கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல: கோர்ட்டில் போலீஸ் வாதம்

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல: கோர்ட்டில் போலீஸ் வாதம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை  விசாரிக்க கோரிய மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி 2022 ஜூலை 13-ம் தேதி  மர்மமான முறையில் இறந்தார். இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில்,  ஐகோர்ட் ஓய்வு நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கக் கோரி மாணவியின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், சிபிசிஐடி விசாரணை நியாயமாக இல்லை. கொலை குற்றச்சாட்டின் கீழ் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கொலை, பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸார் மறைத்துள்ளதாகவும், கண்காணிப்பு கேமிரா பதிவுகள் தனக்குக் காட்டப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் கூறியிருந்தார்.

சம்பவம் நடந்த இடம், ஆதாரங்களின் தடயம் தெரியாத அளவுக்கு முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்த போது மாணவியின் தந்தை சிபிசிஐடி விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்தார் எனவும், அந்த மனு நிலுவையில் உள்ளதால் இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல என காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வு அறிக்கை பெற்று, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இந்நீதிமன்றம் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக விளக்கமளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாணவியின் தாய் தாக்கல் செய்த மனுவை, ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in