`உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு தொழில் வரி பிடித்தம் செய்யவும்'‍- தலைமை பதிவாளருக்கு நீதிபதி கடிதம்

`உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு தொழில் வரி பிடித்தம் செய்யவும்'‍- தலைமை பதிவாளருக்கு நீதிபதி கடிதம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொழில் வரி பிடித்தம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில்,  ' இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் செல்வராஜ் என்பவர் பல ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யப் படுவதில்லை என  கடிதம் அனுப்பி உள்ளார். தொழில் வரி  வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால தடையும் விதிக்கப்பட வில்லை.  எனினும் சம்பள கணக்கு அலுவலகத்தில் தொழில் வரி  பிடித்தம் செய்யக்கூடாது என வற்புறுத்தி வருவதாகவும், அதனால் உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு மட்டும் தொழில் வரி வசூலிக்கப் படவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரசுத்துறை மற்றும் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 12 லட்சம் அதிகாரிகளும்,  ஊழியர்களும்  தொழில் வரி செலுத்தி வரும் நிலையில்,  உயர்நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி செலுத்தாததால் அரசுக்கு ஆண்டுக்கு 59 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே  நீதிமன்ற பணியாளர்களுக்கான தொழில் வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது தொடர்பாக மனு  தாக்கல் செய்யப்பட்டு 24 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதை  ஏற்றுக்கொள்ள முடியாது'  என்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்  தனது கடிதத்தில்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in