இப்படியும் வருவாயைப் பெருக்குகிறது மத்திய அரசு: பயணிகளின் தரவுகளை விற்கிறது ஐஆர்சிடிசி

இப்படியும் வருவாயைப் பெருக்குகிறது மத்திய அரசு: பயணிகளின் தரவுகளை விற்கிறது ஐஆர்சிடிசி

பயணிகளின் தரவுகளை பணமாக மாற்ற ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலக அளவில் நான்காவது பெரிய ரயில் நிறுவனமாக இருந்து வரும் இந்தியன் ரயில்வே, நாடு முழுவதும் 67,956 கி.மீட்டர் அளவுக்கு ரயில் பாதை உள்ளது. இந்தியாவில் முன்பதிவு செய்து ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களின் பயணச் சீட்டுகளை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் (ஐஆர்சிடிசி) மூலம் முன்புதிவு செய்கின்றனர். 90 சதவீதம் பேர் இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி செயலி மூலம் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்கின்றனர்.

மேலும், ரயிலை தவிர்த்து பேருந்து, விமானம் உள்ளிட்ட பயணச் சீட்டு, விடுதிகள், உள்ளூர் மற்றும் வெளிநாடு சுற்றுலா தொடர்பாக பேக்கேஜ்கள், உணவு ஆகிய அனைத்து சேவைகளையும் ஐஆர்சிடிசி இணையதளம் வழங்குகிறது. இந்த இணையதளத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான கணக்கை தொடங்க பெயர், பிறந்த தேதி, இ-மெயில், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைத்தால் கூடுதல் பயணச் சீட்டுகளை முன்பதிவு கொள்ளலாம். இதன்படி கோடிக்கான பயணிகளின் தரவுகள் ஐஆர்டிசியிடம் இருக்கிறது. இந்த தரவுகளை விற்பனை செய்து வருமானத்தை பெருக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. மேலும், ரயில்வே நிறுவனம் பயன்படுத்தி வரும் மற்ற தரவுகளைவும் பணமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசர்களை நியமிக்க Appointment of Consultant for Digital Data Monetization of Indian Railway/IRCTC என்ற பெயரில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆலோசர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் பல்வேறு ரயில்வே இணையதளங்களில் உள்ள தரவுகளை ஆய்வு செய்து, அதை பணமாக மாற்றுவதற்கான திட்டங்களைத் தயார் செய்து அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 1000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in