இந்தியாவில் 4 நகரங்களில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் : மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில்  4 நகரங்களில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் : மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் நான்கு நகரங்களில் டிச.1-ம் தேதி முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறித்துள்ளது.

டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில், பரிசோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி திட்டத்தை முதல்கட்டமாக 4 நகரங்களில் மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. டிச.1-ம் தேதி முதல் டெல்லி, மும்பை, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய 4 நகரங்களில் டிஜிட்டல் கரன்சி டோக்கன் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பேப்பர் வடிவிலான ரூபாய் மற்றும் நாணய வடிவிலான ரூபாய் மதிப்புகளுக்கு இணையான மதிப்பில் இந்த டிஜிட்டல் கரன்சிகளும் விநியோகிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎஃசி பர்ஸ்ட் வங்கி ஆகிய நான்கு வங்கிகள் மூலம் டிஜிட்டல் கரன்சிகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பின்னர் தேவைக்கேற்ப இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in