ஃபேஸ்புக்கில் வெளியான நெருக்கமான போட்டோஸ்: காதலன் செயலால் இளம்பெண் தற்கொலை!

போலீஸாரால் தேடப்படும் அருண் வித்யாதர்
போலீஸாரால் தேடப்படும் அருண் வித்யாதர்ஃபேஸ்புக்கில் வெளியான நெருக்கமான போட்டோஸ்: காதலன் செயலால் இளம்பெண் தற்கொலை!

கேரளாவில் காதலித்த பெண் தொடர்பைத் துண்டித்ததால், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வாலிபர் வெளியிட்டார். இதனால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம், கடுதுருத்தி அருகே உள்ள கொத்தநல்லூரைச் சேர்ந்தவர் அருண் வித்யாதர்(26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். அத்துடன் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்ததுடன், நெருக்கமாக இருந்துள்ளனர். அதை வித்யாதர் புகைப்படங்களாக எடுத்துள்ளார்.

இந்த நிலையில், அருண் வித்யாதரின் நடவடிக்கை பிடிக்காமல், அவருடனான நட்பை இளம்பெண் தவிர்த்துள்ளார். இதனால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அருண் வித்யாதர், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன இளம்பெண் இதுகுறித்து கடந்த ஏப்.30-ம் தேதி கடுதுருத்தி போலீஸில் புகார் அளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண் வித்யாதர், அந்த பெண்ணின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். மேலும், ஐஏஎஸ் அதிகாரியான அந்த பெண்ணின் சகோதரியின் கணவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு, தான் கைது செய்யப்பட்டால் அதற்கு அவர் தான் பொறுப்பு என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், கடுத்துருத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்கள் மகள் தற்கொலைக்கு அருண் வித்யாதர் தான் காரணம் என்று அதில் கூறியுள்ளனர். இதையடுத்து அருண் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் கேரள காவல் சட்டம் 119 (பி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அருண் வித்யாதரைத் தேடி வருகின்றனர்.

நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in