ரயில் பயணிகள் கவனத்திற்கு: இன்டர்சிட்டி ரயில் நாளை தர்மபுரி, ஓசூர் செல்லாது

ரயில் பயணிகள் கவனத்திற்கு: இன்டர்சிட்டி ரயில் நாளை தர்மபுரி, ஓசூர் செல்லாது

எர்ணாக்குளம் - பெங்களூர் இடையேயான இன்டர்சிட்டி ரயிலின் வழித்தடம் நாளை ஒருநாள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு நாளை இன்டர் சிட்டி ரயில் செல்லாது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஓமலூர்-மேட்டூர் அணைக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இன்று ஆங்காங்கே நடந்துவரும் பணிகள் நாளை முழு வீச்சில் நடைபெற உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்சேவையும் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை 27 ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் இருந்து, பெங்களூர் செல்லும் இன்டர்சிட்டி ரயில், காலை 9.10க்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை, பையப்பனக்கள்ளி வழியாக மாற்றுவழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் அந்த ரயில் வழக்கமாகச் செல்லும் ஓசூர், தர்மபுரி, கார்மேளரம் வழியாக செல்லாது.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in