கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: புதுச்சேரியில் கரை ஒதுங்கிய சடலத்தால் பரபரப்பு

கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: புதுச்சேரியில் கரை ஒதுங்கிய சடலத்தால் பரபரப்பு

புதுச்சேரியில் பச்சிளம் குழந்தை கடலில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, வீராம்பட்டினம் மீனவ கிராம கடற்கரையில் இன்று காலை பச்சிளம் குழந்தையின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பச்சிளம் பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

குழந்தை மருத்துவமனையில் பிறந்ததற்கான அறிகுறி இருந்ததால், குழந்தையை கடலில் வீசிச் சென்றவர்கள் குறித்து காவல்துறையின் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பச்சிளம் குழந்தை கடலில் வீசப்பட்ட சம்பவம் வீராம்பட்டினம் மக்களை வேதனையடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in