பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு... தமிழகத்தில் தேர்வானவர்கள் யார், யார்?

பத்ம விருதுகள்
பத்ம விருதுகள்

2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. விஜயகாந்த் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசுவழங்கி வருகிறது. அதன்படி 75வது குடியரசு தினத்தையொட்டி 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. இதில் 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 17 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் உள்பட 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதம் விபூஷ்ண விருது பெற்றவர்கள்
பதம் விபூஷ்ண விருது பெற்றவர்கள்

கலைத் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக வைஜெயந்தி மாலா, பத்மா சுப்பிரமணியம், சிரஞ்சீவி ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பணிக்காக ஸ்ரீபிந்தேஷ்வர் பதக், பொது விவகாரங்களுக்காக முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்திற்கு பத்ம பூஷண்
விஜயகாந்திற்கு பத்ம பூஷண்

அதில், தமிழக முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி, நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், பாடகி உஷா உதுப், நடிகா் மிதுன் சக்கரவா்த்தி உட்பட 22 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

டென்னிஸ் வீரா் ரோஹன் போபண்ணா, ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் எழுத்தாளா் ஜோ டி குரூஸ், சேஷம்பட்டி டி சிவலிங்கம், இந்தியாவின் முதல் யானை பெண் பராமரிப்பாளா் பாா்வதி பருவா, வன சூற்றுச்சூழல் ஆா்வலா் சாய்மி முா்மு ஆகியோருக்கும், மிஸோரமின் சமூக ஆா்வலா் சங்தாங்கிமா, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா் பிரேமா தன்ராஜ், தெற்கு அந்தமானில் இயற்கை விவசாயம் செய்து வரும் செல்லம்மாள், 650-க்கும் மேற்பட்ட அரிசி வகைகளைப் பாதுகாத்து வரும் காசா்கோட்டைச் சோ்ந்த விவசாயி சத்யநாராயண பெலேரி, சா்வதேச மல்லா் கம்பம் பயிற்சியாளா் உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே என 110 பேருக்கு மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்மஸ்ரீ பெற்ற பத்ரப்பன்
பத்மஸ்ரீ பெற்ற பத்ரப்பன்

முருகன், வள்ளி கதைகளைப் பாட்டு மற்றும் நடனத்தை கலந்து சிறப்பாக வெளிப்படுத்தும் வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞா் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலையின் மூலம் சமூகப் பிரச்சினைகளையும் அவா் வெளிப்படுத்தி உள்ளாா் என்றும், ஆண்களுக்கான கலையாக கருத்தப்பட்ட வள்ளி ஒயில் கும்மி நடனக் கலையைப் பெண்களுக்கும் கற்றுத் தந்துள்ளாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in