
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பகிர்ந்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டைபோக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அண்ணா பிறந்த நாளான 2022 செப்.15-ம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்படட்து. மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், இலவச காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இத்திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆய்வறிக்கை ஒன்றை ட்விட்டரில் இன்று பகிர்ந்துள்ளார்.
அதில், "இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட 1543 பள்ளிகளில், 1319 பள்ளியில் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தால் பள்ளியில் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரித்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இத்திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆய்வறிக்கை ஒன்றை ட்விட்டரில் இன்று பகிர்ந்துள்ளார். அதில், இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட 1543 பள்ளிகளில், 1319 பள்ளியில் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தால் பள்ளியில் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.