ஒரே இரவில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை: நெல்லை மக்கள் அச்சம்

நெல்லையில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை
நெல்லையில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளைஒரே இரவில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை: நெல்லை மக்கள் அச்சம்

திருநெல்வேலியில் ஒரே தெருவில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் இட்டேரி பாலாஜி கோல்டன் சிட்டி நகர் உள்ளது. இங்கு ஓய்வுபெற்ற சார் ஆய்வாளர் வேல்குமார் வீடும் உள்ளது. இவரது வீட்டில் நேற்று இரவு யாரும் இல்லை. இதை நோட்டமிட்ட மர்மக்கும்பல் உள்ளே புகுந்து வீட்டில் 10 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றனர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிதாஸ் என்பவர் வீட்டிற்குள் புகுந்து பத்து கிராம் தங்க நகைகள் மற்றும் சில்வர் சாமான்களைத் தூக்கிச் சென்றனர். அதே இரவில் அந்தப் பகுதியைச்சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வீட்டுக்கும் மர்மக்கும்பல் நுழைந்தது.

வெங்கடேஷ் தன் மனைவி, குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மர்மக்கும்பல் பீரோவில் இருந்த 74 கிராம் தங்கநகைகள், 4 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஒரே இரவில் மூன்றுவீடுகளில் அடுத்தடுத்து நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் கொள்ளைச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in