குரூப் 1 தேர்வு எழுத இருந்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு

குரூப் 1 தேர்வு எழுத இருந்தவர்களுக்கு  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு

வருகிற அக். 30-ம் தேதி நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் துணை ஆட்சியர் (18), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்கதுணைப்பதிவாளர் (13), வணிக வரி உதவி ஆணையர் (25),மற்றும் 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என அரசுப் பணியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற் கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அக்.30-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவதாக இருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in