ராமநாதபுரம் பெண்ணுடன் திருமணம்: சட்ட விரோதமாக வசித்த இலங்கை வைரக்கல் வியாபாரி கைது

போலி பாஸ்போர்ட்
போலி பாஸ்போர்ட்ராமநாதபுரம் பெண்ணுடன் திருமணம்: சட்ட விரோதமாக வசித்த இலங்கை வைரக்கல் வியாபாரி கைது

ராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வைரக்கல் வியாபாரி உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கை கொழும்பு மர்ஹானா பின்சே ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ட்வான் சபைதீன், (45). வைரக்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 6 குழந்தைகள் உள்ளன. வியாபாரம் தொடர்பாக, ராமநாதபுரம் அருகே பெரியபட்டனம் பகுதிக்கு அடிக்கடி வந்துள்ளார்.

இங்கு மாற்றுத்திறன் பெண் ஒருவரை கடந்த 2015-ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தை உள்ளன. இவரது செயல்பாடுகளை ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸார் கண்காணித்து வந்தார். பெரியபட்டினம் பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ட்வான் சைபுதீன் உள்பட 2 பேரை பிடித்தனர்.

விசாரணையில், ட்வான் சைபுதீன் இந்திய முகவரியில் சட்ட விரோதமாக வசித்து வந்தது தெரிந்தது. இவர் இந்தியாவிற்கு அடிக்கடி வந்து செல்ல இந்திய வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை போலி முகவரியில் தயாரித்து பாஸ்போர்ட் எடுக்க பனைக்குளத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா (45) உதவியது தெரிந்தது.

இது குறித்து க்யூ பிரிவு போலீஸார் புகாரின் பேரில், ட்வான் சைபுதீன், அன்வர் ராஜா ஆகிய இருவரையும் திருப்புல்லாணி போலீஸார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in