`போதை பவுடரை பயன்படுத்தினால் உடல் மெலியும், மூளை செயலிழக்கும்’- சென்னை காவல்துறை எச்சரிக்கை!

போதை பவுடர்
போதை பவுடர்’போதை பவுடரை பயன்படுத்தினால் மூளை செயலிழக்கும்’ - சென்னை காவல்துறை எச்சரிக்கை..!

``பெட்டமைன் என்ற போதை பவுடரை பயன்படுத்தினால் மூளை செயலிழப்பு, சுய நினைவு இல்லாத நிலை, நரம்பு தளர்ச்சி உள்ளிட்டவைகள் ஏற்படும்'' என சென்னை காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

சென்னையில் பெட்டமைன் என்ற போதை பவுடரின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு கோடியே 80 லட்சம் மதிப்புள்ள பெட்டமைன் போதை பவுடரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த போதை பவுடரை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மூளை செயலிழந்து, சுய நினைவை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், உடல் மெலிந்து நுரையீரல் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூக்கமின்மை ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உள்ளிட்டவை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்டமைன் போதை பவுடரை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை வெளியிட்டுள்ள பெட்டமைன் பாதிப்புகள்
காவல்துறை வெளியிட்டுள்ள பெட்டமைன் பாதிப்புகள்’போதை பவுடரை பயன்படுத்தினால் மூளை செயலிழக்கும்’ - சென்னை காவல்துறை எச்சரிக்கை..!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in