`வாலியை இழந்து போட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன்’- கவிஞர் வைரமுத்து உருக்கம்

கவிஞர்கள் வாலி மற்றும் வைரமுத்து
கவிஞர்கள் வாலி மற்றும் வைரமுத்து’வாலியை இழந்து போட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன்’ - கவிஞர் வைரமுத்து வேதனை..!

தனக்கு போட்டியாக இருந்த கவிஞர் வாலி இல்லாதது, பிடிமானம் இல்லாதது போல சுற்றிக் கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் எண்ணற்ற பாடல்களை எழுதி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் பாடலாசிரியர் வாலி. வைரமுத்துவிற்கும் வாலிக்கும் தான் போட்டி என கூறப்பட்டாலும் 'வைரமுத்து என்னோடு மோதுகிறார் என்று சொல்கிறார்கள். அது தவறு, எனக்கு அவர் மோதிரம் பரிசாகத் தந்து மகிழ்கிறார்’ என கூறும் அளவிற்கு நட்பாக பழகி வந்தனர். கடந்த 2013-ம் ஆண்டு கவிஞர் வாலி காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ’’கமல் இருக்கும் வரை ரஜினிக்கும், ரஜினி இருக்கும் வரை கமலுக்கும், விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும், அஜித் இருக்கும் வரை விஜய்க்கும், ஒரு பிடிமானம் இருக்கும். எனக்கிருந்த பிடிமானத்தைப் பிய்த்துக்கொண்டு போய்விட்டீர்களே வாலி அவர்களே. காற்றில் கத்தி சுற்றிக் கொண்டிருக்கிறேன்’’ என ட்விட்டரில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வாலி குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in