'நீ ஏன் அங்கு சென்றாய்?': மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை

'நீ ஏன் அங்கு சென்றாய்?': மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை

மனைவியிடம் தகராறு செய்து, அவரை  தற்கொலைக்குத் தூண்டியதாக கணவன் மீது தொடரப்பட்ட வழக்கில்,  அவருக்கு சிறைத் தண்டனை பெற்று தந்திருக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.

கள்ளக்குறிச்சி அருகே கணங்கூரை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). இவரது.மனைவி வசந்தமேரி  கடந்த 2010-ம் ஆண்டு தனது உறவினர் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அவரது  இறுதிசடங்கில் கலந்து கொள்ளச் சென்று வந்தார். அது பாலகிருஷ்ணனுக்கு பிடிக்காததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

'நீ ஏன் அங்கு சென்றாய்?' என்று பாலகிருஷ்ணன் கடுமையாக திட்டியதால் மனம் உடைந்த வசந்தமேரி  தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டார். இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் மீது  வரஞ்சரம் காவல் நிலையத்தில் குற்ற எண்:-35/2010-ல் தற்கொலைக்கு தூண்டிய வழக்குபதிவு செய்யப்பட்டது. அதில்  விசாரணை முடித்து இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில்  கள்ளக்குறிச்சி முதன்மை சார்பு நீதிமன்றத்தின், கிளை நீதிமன்ற நீதிபதி வீரண்ணன் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார்.  அவரது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் பாலகிருஷ்ணன் குற்றவாளி என்று உறுதி செய்து இதச 306 குற்றத்திற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் தண்டனையாக தீர்ப்பளித்தார். இந்த வழக்கைச் சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன்  பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in