தடபுடல் திருமணம்; 14 வயது சிறுமிக்கு பிறந்து இறந்த குழந்தை: சிக்கிய உசிலம்பட்டி கணவர்!

தடபுடல் திருமணம்; 14 வயது சிறுமிக்கு பிறந்து இறந்த குழந்தை: சிக்கிய உசிலம்பட்டி கணவர்!

14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்த நிலையில், சிறுமியின் கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள போலக்காபட்டியைச் சேர்ந்தவர் 28 வயதான உதயக்குமார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தனது உறவினரின் மகளான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை குடும்பத்தினர் தடபுடலாக திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இச்சூழலில், ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமி மற்றும் கணவர் போலக்காபட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சிறுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. போலக்காபட்டியில் உள்ள உதயக்குமாரின் வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை சற்று நேரத்தில் இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் உயிரிழந்த குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சிறுமியை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து, குழந்தைத் திருமணம் செய்தது, 14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கியது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியின் கணவர் உதயகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in