2.37 கோடி மின்நுகர்வோரில் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் இவ்வளவு பேர் தானா?

2.37 கோடி மின்நுகர்வோரில் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் இவ்வளவு பேர் தானா?

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவால் ஒரு வாரத்தில் 50 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாயிகள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுந்தகவல் அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்துபவர்கள், ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

இதனிடையே, ஆதார் இணைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவியது. குறிப்பாக இலவச மின் திட்டம் நிறுத்தப்படுமா, மின் கட்டணம் செலுத்த முடியாமல் போகுமா என மின்நுகர்வோர் குழப்ப நிலையில் இருந்தனர். இந்த நிலையில், பொதுமக்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மின் கட்டண அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, கடந்த மாதம் 28- ம் தேதி தமிழகம் முழுவதும் 2,811 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டன. இதில், பொதுமக்கள் நேரடியாக வந்து ஆதாரை இணைத்து கொள்ளலாம் என மின்துறை அறிவித்தது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதாரை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது.,அத்துடன் செல்போன் மற்றும் கணினி வாயிலாக ஆன்லைன் மூலம் பலர் ஆதார் எண்ணை இணைத்தனர்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் மின் இணைப்பு பெற்றுள்ள 2.37 கோடி மின்நுகர்வோரில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஒரே வாரத்தில் இணைத்துள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in