விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மணிநகரைச் சேர்ந்தவர் செல்வி(30) இவர் ஊர்க்காவல்படையில் பணிசெய்து வருகிறார். மதுரையில் உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷத்திற்காக செல்வி, தன் நண்பரான லெட்சுமணன்(26) என்பவருடன் சென்றார். அங்கிருந்து அவர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர். வாகனத்தை செல்வி ஓட்டிவந்தார். இவர்கள் அருப்புக்கோட்டை அருகில் உள்ள கல்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டு இருந்தபோது பின்னால் வேகமாக வந்த கார் பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பைக்கை ஓட்டிய செல்வி, பின்னால் இருந்த லெட்சுமணன் இருவருமே தூக்கிவீசப்பட்டனர்.
அக்கம், பக்கத்தினர் அவர்களைமீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வி பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்தில் பலியான செல்விக்கு முருகன் என்ற கணவரும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சாலைவிபத்தில் ஊர்க்காவல்படை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.