சாதி சான்றிதழுக்காக உயிரை மாய்த்த நரிக்குறவர்; கண்டுகொள்ளாத தமிழக அரசு: உயர்நீதிமன்றம் காட்டிய அதிரடி!

சாதி சான்றிதழுக்காக உயிரை மாய்த்த நரிக்குறவர்; கண்டுகொள்ளாத தமிழக அரசு: உயர்நீதிமன்றம் காட்டிய அதிரடி!

நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை தானாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(42). நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இவர், தனது மகனுக்காக சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த வடமாநிலத்தவருக்கும் நரிக்குறவர் சான்றிதழ் வழங்குவதால் தமிழக நரிக்குறவர்களின் அடையாளம் முற்றிலும் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மலைக்குறவர் சமுதாயத்திற்கு ஒரேவிதமான சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக பலமுறை அரசிடம் முறையிட்டதுடன் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தும் சான்றிதழ் வழங்காமல் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகம் அருகே உள்ள தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நுழைவு வாயிலில் நேற்று மாலை நரிக்குறவர் இனத்தை சேர்ந்த வேல்முருகன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தமிழக அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனிடையே, வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையிட்டார். இதைத் தொடர்ந்து நரிக்குறவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரிக்க உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in