கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து: சென்னையைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் பலி

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து: சென்னையைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் பலி

கேதார்நாத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் பலியானார்கள்.

உத்தராகண்ட் மாநிலம், கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இன்று சென்று கொண்டிருந்தது. பாதாவில் இருந்து கேதார்நாத்திற்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 7 பேர் பலியானார்கள்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர்கள், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பிரேம்குமார், கலா,சுஜாதா என்று உத்தராகண்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்ற இருவர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in