ஷாக்... ஹரியாணாவில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு: போர்க்களமான போராட்டக்களம்!

கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் உள்ள ஷம்பு எல்லையில் தடுப்புகளை உடைக்க முற்பட்ட விவசாயிகள் பேரணி குழுவினர் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை முதல் டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டரில் பேரணி சென்று கொண்டிருக்கின்றனர்.

இன்று காலை 10 மணியளவில் ஃபதேகர் சாஹிபில் இருந்து அணிவகுப்பைத் தொடங்கி, ஷம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி விவசாயிகள் செல்கின்றனர். ஃபதேகர் சாஹிப் மற்றும் ஷம்பு எல்லைக்கு இடையிலான தூரம் 35-40 கி.மீ. ஆகும்.
தேசிய நெடுஞ்சாலையில் ஷம்பு எல்லையை நோக்கி விவசாயிகளின் டிராக்டர் டிராலிகள் அணிவகுத்து செல்கின்றன. இப்போராட்டத்தில் விவசாயிகளுடன் முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என குடும்பத்தினரும் டிராக்டரில் அமர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

விவசாயிகளைத் தடுக்க குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்கள்.
விவசாயிகளைத் தடுக்க குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்கள்.

ஹரியாணாவில் உள்ள அதிகாரிகள் அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருஷேத்ரா, சிர்சாவில் பல இடங்களில் கான்கிரீட் தடுப்புகள், ஆணிகள், முள்கம்பிகளைப் பயன்படுத்தி பஞ்சாப், ஹரியாணாவிலிருந்து டெல்லி செல்லும் எல்லைகளை அடைத்துள்ளனர்.
பஞ்சாப் - ஹரியாணா எல்லைகளில் பல இடங்களில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் உள்ளிட்ட கலவரக் கட்டுப்பாட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹரியாணா அரசு 15 மாவட்டங்களில் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

டெல்லியை நோக்கி டிராக்டரில் செல்லும் விவசாயிகள்.
டெல்லியை நோக்கி டிராக்டரில் செல்லும் விவசாயிகள்.

இந்நிலையில் அம்பாலாவில் உள்ள ஷம்பு எல்லையை அடைந்த விவசாயிகள் தடுப்புகளை உடைக்க முற்பட்டனர். அப்போது பேரணி குழுவினர் மீது ஹரியாணா போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அந்த இடத்திலிருந்து அனைவரும் சிதறி ஓடினர். அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது. கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in