குஜராத் கேபிள் பாலம் அறுந்து விபத்து: முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், அன்புமணி ராமதாஸ் இரங்கல்

குஜராத் கேபிள் பாலம் அறுந்து விபத்து: முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், அன்புமணி ராமதாஸ் இரங்கல்

குஜராத் கேபிள் பாலம் அறுந்து விழுந்து 141 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ குஜராத் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் விரைவில் குணமடைய விரும்புகின்ற அதேவேளையில், சிக்கியுள்ள எஞ்சியுள்ள மக்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குஜராத் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்” என தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மாச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 130க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் மாதம் முதல் 7 மாதங்கள் நடைபெற்ற பராமரிப்பு பணிகளுக்குப் பிறகு கடந்த 26&ஆம் தேதி தான் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. அடுத்த 4 நாட்களில் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் இடிந்து விபத்துக்குள்ளாவதை தடுப்பதற்கான பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்கப் படுவதையும், அவை முழுமையாக கடைபிடிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in