எதிர்பார்ப்புடன் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஏமாற்றத்துடன் திரும்பும் மாநிலங்கள்

எதிர்பார்ப்புடன் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஏமாற்றத்துடன் திரும்பும் மாநிலங்கள்

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை இந்த மாதத்திற்கு மேல் நீட்டிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் மாநிலங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

இது குறித்து பேசிய புதுச்சேரி நிதியமைச்சர் கே.லட்சுமிநாராயணன், அனைத்து மாநிலங்களும் இழப்பீட்டு முறையை நீட்டிக்கக் கோரியதாகவும், ஆனால் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மறைமுக வரி விதிப்பு முறையின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் நேற்றும், இன்றும் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்று இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது, ஆனால் இதுபற்றிய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

ஜூலை 1, 2017 முதல் நாடு தழுவிய சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, ​​ஜூன் 2022 வரை ஐந்து ஆண்டுகளுக்கு புதிய வரியால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுசெய்ய மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசால் உறுதியளிக்கப்பட்டது. கரோனா தொற்றுநோயால் இரண்டு ஆண்டுகள் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்த நிலையில் இந்த இழப்பீட்டு முறையை நீட்டிக்க பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

28 சதவீத வரிக்கு மேல் ஆடம்பரம், குற்றத்திற்குரிய மற்றும் பாவத்திற்குரிய பொருட்களுக்கு செஸ் வரி விதிப்பதன் மூலம் இந்த இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுசெய்ய மாநிலங்களுக்கு 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, ஆடம்பர மற்றும் பாவப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இழப்பீட்டு செஸ் வரியை மார்ச் 2026 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in