குரூப் 5ஏ தேர்வு: முக்கிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

குரூப் 5ஏ தேர்வு: முக்கிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 21-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப்5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இன்று முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 26 முதல் 28-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் டிசம்பர் 18-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in