'எத்தனை மணிக்கு டாக்டர்கள் பணிக்கு வருகிறார்கள்?': அரசு மருத்துவமனைகளைக் கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

'எத்தனை மணிக்கு டாக்டர்கள் பணிக்கு வருகிறார்கள்?': அரசு மருத்துவமனைகளைக் கண்காணிக்க  சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர் மற்றும் செவிலியர் வருகை, நோயாளிகளுக்கான சிகிச்சை ஆகியவற்றைக் கண்காணிக்கப் பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் எனத் தமிழக சுகாதாரத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகளைக் காலாவதியாகச் செய்ததாக, பணி ஓய்வு பலன்கள் வழங்க மறுத்ததை எதிர்த்து, மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமாலை ராணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், முத்துமலை ராணி மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ததுடன், புதிதாக விசாரணை நடத்தும்படி அரசுக்கும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உரிய நேரத்திற்கு வருகிறார்களா,  நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்துவதற்காக மண்டல மற்றும் மாவட்ட அளவிலான பறக்கும் படைகளை அமைக்கத் தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். பறக்கும் படைகள் முறையாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டுமெனவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in