திடீரென டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி: என்ன காரணம்?

திடீரென டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி: என்ன காரணம்?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து இன்று காலை 11 மணியளவில் விமானம் மூலமாக மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டார். இந்த பயணம் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கார் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் இந்த டெல்லி பயணத்தின்போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல மசோதாக்களை தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், ஆளுநரின் இந்த டெல்லிப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in