தூங்கச் சென்ற மாணவி தூக்கில் தொங்கினார்; சாப்பிட அழைக்கச் சென்ற தாய் கதறல்!

தூங்கச் சென்ற மாணவி தூக்கில் தொங்கினார்; சாப்பிட அழைக்கச் சென்ற தாய் கதறல்!

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் அரசுப்பள்ளியில் பிளஸ் டூ படித்துவந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி மூலக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூனன். டிரைவராக இருக்கும் அர்ஜூனன் வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் இந்தி ஆசிரியையாக உள்ளார். இந்தத் தம்பதியின் மகள் ஹரிணி(17) சேரன்மகாதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்துவந்தார்.

நேற்று சரஸ்வதி பூஜை என்பதால் மாலையில் வீட்டில் பூஜை கொடுத்துவிட்டு குடும்பமாக அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றனர். அப்போது கோயிலுக்கும் வந்தார் ஹரிணி, தொடர்ந்து இரவில் குடும்பமாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஹரிணி, திடீரென தனக்கு தூக்கம் வருவதாகச் சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றார். சிறிது நேரத்தில் ஹரிணியை சாப்பிட அழைக்க அவரது அம்மா சென்றார். ஆனால் ஹரிணி அங்கு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேரன்மகாதேவி போலீஸார், மாணவி ஹரிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

குடும்பத்துடன் கோயிலுக்குப் போய் தரிசித்துவிட்டு, வீட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்த பிளஸ் டூ மாணவி ஹரிணி திடீர் தற்கொலை செய்ய காரணம் என்ன என போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்தவாரம் இதேபோல் குடும்பத்தோடு குமரிமாவட்டம், முப்பந்தல் கோயிலில் தரிசனம் செய்துவிட்டுவந்த நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் திடீர் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in