இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச: பசில் ராஜபக்ச வெளிநாடு தப்பி செல்ல முயற்சி!

இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச: பசில் ராஜபக்ச வெளிநாடு தப்பி செல்ல முயற்சி!

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி கடுமையாக வாட்டி வரும் நிலையில், அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் கொந்தளித்தனர். சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் குதித்த பொதுமக்கள், பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டை தீவைத்து எரித்தனர். இதையடுத்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ரணில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் மக்களின் போராட்டம் தற்காலிகமாக ஓய்ந்திருந்தது. இருந்தாலும் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே சென்றதால் மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட லட்சக்கணக்கான பொதுமக்கள், அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அதிபர் மாளிகையில் மக்கள் இருப்பதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், அதிபர் கோத்தபய தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வரவில்லை. கோத்தபய தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டத்தை தாெடருவோம் என்று பொதுமக்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, ஜூலை 13-ம் தேதி பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய அறிவித்தார்.

இந்நிலையில், ஒரு நாளைக்கு முன்பாகவே அதாவது இன்று அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கோத்தபய ராஜபக்ச. ராஜினாமா கடிதத்தில் அவர் இன்று கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார். பசில் ராஜபக்சவின் ஆவணங்களை சரிபார்க்க விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கட்டுநாயக்கா விமானநிலைய அதிகாரிகளின் நடவடிக்கையால் மீண்டும் பசில் ராஜபக்ச இல​ங்கை திரும்பியதாக தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in