கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டி வழக்கில் தொடரும் கைது: கும்பல் தலைவன் யார்?

மீட்கப்பட்ட தங்கக்கட்டிகள்.
மீட்கப்பட்ட தங்கக்கட்டிகள். கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டி வழக்கில் தொடரும் கைது: கும்பல் தலைவன் யார்?

மன்னார் கடலில் வீசிய தங்கக்கட்டிகள் வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை மத்திய வருவாய் புலனாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவில் கைது செய்தனர்.

துபாயிலிருந்து இலங்கைக்கு அனுப்பிய தங்கக்கட்டிகள் கடல் வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு பிப்.8-ம் தேதி இரவு தகவல் கிடைத்தது. இதன்படி, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படையினர், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது மண்டபம் தென்  கடற்பகுதிக்கு வந்த பைபர் படகை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றனர். அப்போது படகில் இருந்து ஒரு மூட்டை கடலில் எறியப்பட்டது. இதையடுத்து  அப்படகை சுற்றி வளைத்து அதிலிருந்த 3 பேரிடம் விசாரித்தனர்.

துபாயில் இருந்து இலங்கையைச் சேர்ந்த கடத்தல் கும்பலுக்கு, அனுப்பிய தங்கக்கட்டிகளை மண்டபம் அருகே வேதாளையைச் சேர்ந்த ஒருவருக்கு கடத்தி வந்தது என கூறினர். இதையடுத்து கடலுக்கு அடியில் இருந்து ரூ.10.50 கோடி மதிப்பிலான 17.74 கிலோ தங்கக்கட்டி, நகைகளை மீட்டனர். இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், மேலும் சிலருக்கு தொடர்பிருந்தது தெரிய வந்தது. இதனடிப்படையில் வேதாளையைச் சேர்ந்த சாதிக் அலி (35), அசாருதீன் (28), மண்டபத்தைச் சேர்ந்த ஜஹாங்கீர் (25) ஆகியோர் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கும்பலின் தலைவனான முக்கிய குற்றவாளி யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in