காப்பகத்திலிருந்து 6 சிறுமிகள் தப்பியோட்டம்: பாதுகாவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்!

பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம்காப்பகத்திலிருந்து சிறுமிகள் தப்பியோட்டம்; பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு காப்பகத்திலிருந்து சிறுமிகள் தப்பியோடிய விவகாரத்தில் பாதுகாவலர்களை பணியிடை நீக்கம் செய்து, சமூகப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியில்  அன்னை சத்யா அரசு குழந்தைகள்  காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்குத் தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகள், கல்வியைத் தொடர இயலாத குழந்தைகள் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் சிறு வயதில் திருமணம் வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி வயது குறைந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சிறுமிகள், குழந்தைகள் நலக் குழுமத்தின் மூலம் அரசு காப்பகத்தில் தங்க வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தில் குழந்தைகள்,சிறுமிகள் என 29 பேர் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 சிறுமிகள் காதல் பிரச்சனை காரணமாகக் குழந்தைகள் நலக் குழுமத்தினால் மீட்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்  நேற்றிரவு வழக்கம்போல் சிறுமிகள் அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டுத் தூங்கச் சென்று விட்டனர். இரவு பணியிலிருந்த  பாதுகாவலரின் அறையை தாழிட்டு விட்டு 6 சிறுமிகள் தப்பி ஓடினர்.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்திலிருந்து காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் காப்பகத்திலிருந்து தப்பி ஓடிய முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியும் கரசங்கால் பகுதியைச் சேர்ந்த சிறுமியும் தங்கள் வீடுகளுக்குச் சென்ற நிலையில் அவர்களின் பெற்றோர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து சிறுமிகளை ஒப்படைத்தனர்.

மீதம் உள்ள நான்கு சிறுமிகளைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் தப்பி ஓடும் வகையில் அஜாக்கிரதையாக இருந்த காப்பக உதவியாளர் தீனா தேவி, பாதுகாவலர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் பணிவிடை நீக்கம் செய்து சமூகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in