குடும்பத்தகராறில் பினாயில் குடித்த காதலி: இறந்து விடுவாளோ என்ற வேதனையில் பொறியியல் மாணவன் தற்கொலை!

காதலன் சூர்யா
காதலன் சூர்யாகுடும்பத்தகராறில் பினாயில் குடித்த காதலி: இறந்து விடுவாளோ என்ற வேதனையில் பொறியியல் மாணவன் தற்கொலை!

குடும்பத் தகராறு காரணமாகப் பினாயில் குடித்துத் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் காதலி இறந்து விடுவாளோ என்ற வேதனையில் காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மறைமலைநகர் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா. இவர் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டுப் படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணைக் கடந்த ஒரு வருடமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது

இதற்கிடையே வீட்டில் குடும்பத் தகராறு காரணமாகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காதலி பினாயில் குடித்துத் தற்கொலை முயற்சிச் செய்த நிலையில் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால் தீராத மன உளைச்சலில் இருந்த சூர்யா, தன் காதலி இறந்து விடுவாளோ என்ற வேதனையில் தானும் தற்கொலைச் செய்ய முடிவெடுத்து, நேற்று வீட்டில் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலைச் செய்து கொண்டார்.

சூர்யா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து உறவினர்கள் மறைமலைநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீஸார் சூர்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலி இறந்து விடுவாளோ என்ற அச்சத்தில் இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அந்தக் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in