தாய்க்கு பரிகார பூஜை; 13 வயது மகள் 4 மாத கர்ப்பம்: மந்திரவாதி போக்சோவில் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமைதாய்க்கு பரிகார பூஜை; 13 வயது மகள் 4 மாத கர்ப்பம்: மந்திரவாதி போக்சோவில் கைது

தாய்க்கு பரிகாரம் செய்வதற்காக சென்ற இடத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதியை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் மேலகலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35), இவர் வீடுகளில் சென்று தோஷம் நீக்க மாந்தரீகம் செய்வது, தன்னைத் தேடி வருவோருக்கு மந்திரம் மூலம் குறைகள் போக்குவது ஆகியவற்றை செய்துவந்தார். நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மனைவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு நெருக்கமான நபர் ஒருவரின் மூலம் மந்திரவாதி மணிகண்டன் பற்றித் தெரியவந்தது.

அவரை சந்தித்ததும், மணிகண்டன் வீட்டில் சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என சொன்னார். தொடர்ந்து அந்த வீட்டிற்கும் அடிக்கடி செல்லத் தொடங்கினார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாமல், பரிகாரம் செய்யக் கேட்டு வந்தவரின் மகளான எட்டாம் வகுப்பு மாணவி மட்டும் இருந்தபோது திடீரென வீட்டிற்குச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது பரிகாரத்தில் ஒருவகை எனவும், வெளியில் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் 13 வயதே ஆன அந்தச் சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி இருந்தது. சிறுமியின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பெற்றோருக்குத் தெரியவந்ததும், மந்திரவாதி மணிகண்டன் தன்னை பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறினார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து நாகர்கோவில் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மந்திரவாதி மணிகண்டன் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in