கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நெரிகம் கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் படிப்பை முடித்து ஒசூர் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே பணிக்கு சென்ற மகள் திரும்பாதது கண்டு பிரியங்காவின் தந்தை வெங்கடசாமி தேட ஆரம்பித்தார். அப்போது அவரை அலைபேசியில் தொடர்புகொண்ட அநாமதேய நபர், பிரியங்காவை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.10 லட்சம் தர வேண்டும் எனவும் மிரட்டி உள்ளார்.
பயந்துபோன வெங்கடசாமி, பேரிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார் பிரியங்காவை தேடி வந்த நிலையில், வனப்பகுதியில் கிடைகப்பெற்ற இளம்பெண் சடலம் பிரியங்கா என உறுதி செய்யப்பட்டது. பிரியங்கா கொலை செய்யப்பட்டதன் கோணத்தில், அவருக்கு நன்கு அறிமுகமானவர்களை போலீஸார் நெருக்கி விசாரித்ததில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பிரியங்கா அன்றாடம் பயணிக்கும் பேருந்தில் ஸ்ரீதர் பழக்கமான வகையில், இருவரும் காதலித்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே காணாமல்போன பிரியங்கா கொலையாகி வனப்பகுதியில் சடலமாக வீசப்பட்டதன் பின்னணியில், ஸ்ரீதர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.