ஒரு மணி நேரத்தில் கருகிய மூன்றேகால் கோடி கஞ்சா: தீவைத்து அழித்த நெல்லை போலீஸ்

கஞ்சா
கஞ்சாநெல்லையில் மூன்றேகால் கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா தீவைத்து அழிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மூன்றே கால் கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா தீவைத்து அழிக்கப்பட்டது.

தென் மாவட்ட ஐ.ஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தலின்படி தென் மாவட்டங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் அதிரடி சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கிப் பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 12 வழக்குகள் போடப்பட்டன. இதில் மொத்தம், 1,304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றின் மொத்த மதிப்பு 3.26 கோடி ஆகும். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவேஸ் குமார் முன்னிலையில் நெல்லை மாவட்டம், விஜயநாராயணபுரம் பகுதியில் உள்ள பயோமெடிக்கல் வேதியல் ஆலையில் வைத்து அழிக்கப்பட்டது. இதில் நெல்லை எஸ்.பி சரவணன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மூன்றே கால் கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஒரு மணி நேரத்திலேயே எரிந்து நாசமானது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in