ஆட்டோ முருகேசன் என்ற ஸ்பீடு முருகேசன்.
ஆட்டோ முருகேசன் என்ற ஸ்பீடு முருகேசன்.ஆட்டோவில் பொதுமக்களுக்கு இலவச சவாரி: சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடிய ஸ்பீடு முருகேசன்!

ஆட்டோவில் பொதுமக்களுக்கு இலவச சவாரி: சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடிய ஸ்பீடு முருகேசன்!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது வண்டியில் பொதுமக்களை இன்று ஒருநாள் இலவசமாக அழைத்துச் சென்றுள்ளார்.

ஐபிஎல் 2023-ம் ஆண்டின் இறுதிப் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே போட்டி நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனால் ஐபிஎல் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையை சிஎஸ்கே தட்டிச் சென்றது.

சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்த நிலையில், சென்னையில் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடி வருகிறார். அவர், சென்னை பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் ஸ்பீடு முருகேசன்.

சிறு வயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட முருகேசன் வீட்டுச்சூழல் காரணமாக பாதியிலேயே கிரிக்கெட் பயிற்சியை விட நேர்ந்தது. அதன் பிறகு வீட்டருகே உள்ள மைதானத்தில் சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார்.

ஆட்டோவில் விளம்பரம்
ஆட்டோவில் விளம்பரம்ஆட்டோவில் பொதுமக்களுக்கு இலவச சவாரி: சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடிய ஸ்பீடு முருகேசன்!

குறிப்பாக தோனியின் தீவிர ரசிகர்கள் பலர் இந்தியா வெற்றியின் போது, பேனர் வைப்பது, உடலில் பச்சை குத்துவது போன்ற பல வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், ஸ்பீடு முருகேசன், அதை மக்களுக்கு பயனுள்ள செயலில் ஈடுபட திட்டமிட்டார். கடந்த 2011-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது தோனியின் ரசிகரான ஸ்பீடு முருகேசன் தனது ஆட்டோவில் ஏறும் பொதுமக்களுக்கு ஒரு நாள் முழுவதும் சவாரி இலவசம் என்று அறிவித்து அதை அமல்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

அதன்பிறகு சிஎஸ்கே கோப்பையை வெல்லும் அனைத்து போட்டியிலும் ஒருநாள் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு வலம் வந்துள்ளார்.

சிஎஸ்கே ரசிகர்களுடன் முருகேசன்.
சிஎஸ்கே ரசிகர்களுடன் முருகேசன்.ஆட்டோவில் பொதுமக்களுக்கு இலவச சவாரி: சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடிய ஸ்பீடு முருகேசன்!

இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக நேற்று கோப்பையை வென்றதால் ஸ்பீடு முருகேசன் இன்று ஆட்டோவில் சவாரி இலவசம் என்ற பதாகையை ஒட்டியபடி சென்னை முழுவதும் சுற்றி வருகிறார். இதுகுறித்து முருகேசன் கூறுகையில், " சென்னையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தோனியின் தீவிர ரசிகரான நான் இன்று காலை முதல் 5 சவாரிகள் இலவசமாக ஓட்டினேன். பயணிகள் பல பேர் நானும் தோனி ரசிகன் தான், அதனால் பாதி சவாரி கட்டணத்தையாவது வாங்கிக் கொள்ளுங்கள் என கொடுத்து சென்றனர்" என்று கூறினார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் தனது ஆட்டோவில் ஏறியதாகவும், அவர்களிடம் தோனியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என கேட்ட போது இந்த முறை தோனி பிஸியாக இருப்பதாகவும் அடுத்த முறை கட்டாயமாக சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக அவர் தெரிவித்துள்ளதாக முருகேசன் கூறினார். அத்துடன் தோனி ரசிகராக ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டுவதில் பெருமை கொள்வதாக அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in