காதலனுடன் சேர்த்து வைக்கிறோம்; 40 சவரன் நகைகளை இழந்த இளம்பெண்: சென்னை ஏர்போர்ட்டில் சிக்கியது கும்பல்

காதலனுடன் சேர்த்து வைக்கிறோம்; 40 சவரன் நகைகளை இழந்த இளம்பெண்: சென்னை ஏர்போர்ட்டில் சிக்கியது கும்பல்

சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணிடம், காதலனிடம் சேர்த்து வைப்பதாக கூறி, 40 சவரன் தங்க நகைகளை இணையதளம் மூலம் ஏமாற்றிய பஞ்சாப் ஆசாமிகள் இரண்டு பேரை, சென்னை விமான நிலைய போலீஸார் பொறிவைத்து பிடித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் காதலில், தோல்வி அடைந்த நிலையில் இணையதளத்தில் "ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்" என்ற செயலி, காதலில் தோல்வி அடைந்த அல்லது காதல் நிறைவேறாத இளைஞர்களுக்கு உதவி செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை அடுத்து அந்த இளம்பெண், இணையதள செயலியில் தனது பெயரை பதிவு செய்து, தனது காதலன் பற்றிய விவரங்களையும் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து அந்த இளம் பெண்ணை இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட, இரண்டு பேர் சென்னை விமான நிலையம் வரும்படி கூறினர். இளம்பெண்ணும் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு வந்த இரு இளைஞர்கள், நாங்கள் உங்கள் காதலரோடு சேர்த்து வைத்து விடுகிறோம். ஆனால் கொஞ்சம் செலவு அதிகமாகும் என்று கூறி பணம் அல்லது தங்கநகை கேட்டுள்ளனர். அந்த இளம் பெண் 40 சவரன் தங்க நகைகளை, சென்னை விமான நிலையத்தில் வைத்து, அவர்களிடம் கொடுத்துள்ளார்.

தங்க நகைகளை வாங்கிச் சென்ற அந்த இரு இளைஞர்கள், அவர்கள் கூறிய நாட்களுக்குள் இளம் பெண்ணை, காதலனோடு இவரை சேர்த்து வைக்கவில்லை. இதற்கு மாறாக அந்த இளைஞர்கள் அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, நீ கொடுத்த நகைகள் போதுமானது அல்ல. மேலும் ஐந்து லட்சம் பணம் வேண்டும். இல்லையென்றால் உன்னை பற்றி அவதூறாக இணையதளங்களில் செய்திகளை பரப்பி விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பதறிப்போன இளம் பெண், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். 

அதன்பின்பு சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் வந்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீரோடு புகார் எழுதிக் கொடுத்தார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இணையதள முகவரியை ஆய்வு செய்த போது, அது பஞ்சாப் மாநிலத்தின் இருப்பது தெரியவந்தது. எனவே போலீஸார் அந்த இளம்பெண்ணை வைத்து அந்த இளைஞர்களை தொடர்பு கொள்ள செய்தனர். 

அப்போது பேசிய அந்த இளம்பெண், சென்னை விமான நிலையத்திற்கு வந்தால், நீங்கள் கேட்ட பணத்தை கொடுக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். அந்த இளைஞர்களும் அதற்கு சென்னை வருவதாக கூறியுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில், இளம் பெண்ணை தனியே நிறுத்தி, அந்த இளைஞர்களிடம் பேசச் செய்தனர். அதோடு சாதாரண உடை அணிந்த போலீஸார், பயணிகள் போல் நடித்து கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அனில் குமார் (27), ககன்தீப் பார்கவ் (33) ஆகிய இரு இளைஞர்கள் வந்து, இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது, சாதாரண உடை அணிந்த போலீஸார் சுற்றி  வளைத்து பிடித்து கைது செய்து, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். 

அவர்களிடம் விசாரணை நடத்திய போது, போலியான இணையதளத்தை தொடங்கி பல இளம் பெண்களையும் இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதை அடுத்து இரண்டு பேரையும் கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்து பணம், ரூபாய் 8.5 லட்சம், 54 கிராம் தங்க செயின்கள் பறிமுதல் செய்தனர்.

இரண்டு பேர் மீதும் சென்னை விமான நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in