ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் எப்போது? - முழுமையான விவரம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

ஆந்திர பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் தேதி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது: “நாடு முழுவதும் அமைக்கப்படும் 10.48 லட்சம் வாக்குச் சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறைகள், வழி அடையாளம், சாய்தளம்/சக்கர நாற்காலி, உதவி மையம், வாக்காளர் வசதி மையம், போதுமான வெளிச்சம், பந்தல் ஆகிய வசதிகள் செய்யப்படும். சவால்களைச் சமாளிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாக, பிளவுபடுத்துவதை விட உத்வேகம் தரும் அரசியல் பேச்சுகளை வளர்ப்பது, பிரச்சினை அடிப்படையிலான பிரசாரம், வெறுப்பு பேச்சுகளை தவிர்ப்பது, சாதி, மத மோதல்களை ஏற்படுத்தக் கூடாது, தனிப்பட்ட வாழ்க்கையின் எந்த அம்சத்தையும் விமர்சிக்க வேண்டாம். பொதுத் தேர்தல்களில் நாகரீகமான பிரசாரம், சரிபார்க்கப்படாத மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும். விளம்பரங்களை செய்தியாகக் காட்டுவது கூடாது" என்ற அறிவுறுத்தல்களை வெளியிட்டார்

4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்
4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்

மேலும், “ஆந்திர பிரதேசத்தில் 175 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 13ம் தேதி நடைபெறும். அருணாச்சலப் பிரதேசத்தில் 60 தொகுதிகள் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

147 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு 4 கட்டங்களாக நடைபெறும். அதன்படி மே 13, மே 20, மே 25, ஜூன் 1 ஆகிய 4 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். அனைத்து மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும்” இவ்வாறு தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள்.. இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!

செல்லூர் ராஜூ செம தாக்கு... தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்!

குட் நியூஸ்... அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000!

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வேண்டும்... தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம்!

பெண்ணைக் கேலி செய்த வாலிபர் கோடாரியால் வெட்டிக் கொலை.. தாபாவில் பயங்கரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in