மூச்சுத்திணறி நான்கு மாத பெண் குழந்தை பலி: காரணம் அறிந்த தாய் அதிர்ச்சி

மூச்சுத்திணறி நான்கு மாத பெண் குழந்தை பலி: காரணம் அறிந்த தாய் அதிர்ச்சி

கேரளாவில் நான்கு மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஆலூரைச் சேர்ந்தவர் அபி. இவரது மனைவி ஷெல்ஜா. இவருக்கு நான்கு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று இரவு குழந்தை ஹைசலுக்கு அவரது தாய் ஷெல்ஜா தாய்ப்பால் ஊட்டியுள்ளார்.

இந்த நிலையில் காலையில் எழுந்து அவர் பார்த்த போது குழந்தை மூச்சுப்பேச்சற்று இருந்துள்ளது.இதனால் பதறிப்போன பெற்றோர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஹைசலை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தாய்ப்பால் குழந்தையின் சுவாசப்பாதையை அடைத்து மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், தாய் அதிர்ச்சி அடைத்தார். நான்கு மாதக்குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in