அதிர்ச்சி... பயங்கர விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்!

விபத்திற்குள்ளான மெகபூபா முப்தியின் கார்.
விபத்திற்குள்ளான மெகபூபா முப்தியின் கார்.
Updated on
1 min read

காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

மெகபூபா முப்தியும் விபத்திற்குள்ளான காரும்
மெகபூபா முப்தியும் விபத்திற்குள்ளான காரும்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,   அனந்த்நாக் மாவட்டம், கானாபால் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிப்புக்குள்ளானவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக  நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது  அவர் சென்ற கார்  அனந்த்நாக் மாவட்டம் சங்கம் கிராமத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. 

சங்கம் கிராமத்தை அடைந்தபோது, முன்னே சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, மெகபூபா முப்தி காரின் முன்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனாலும் காருக்குள் இருந்த மெகபூபாபாவுக்கு பாதிப்புகள் ஏதுமில்லை.  அவர்  காயமின்றி அவர் உயிர் தப்பியுள்ளார். ஆனால், அவரின் பாதுகாப்பு அதிகாரிக்கு  சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

மெகபூபா முப்தி
மெகபூபா முப்தி

இது குறித்து தகவல்கள் பரவியதும் தொண்டர்கள் மிகவும் பதற்றத்துக்கு உள்ளானார்கள். அதையடுத்து இந்த விபத்து குறித்தும், முப்தியின் உடல்நிலை குறித்தும் அவரது மகள் இல்திஜா அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டார்.

அதில், "அனந்த்நாக் செல்லும் வழியில் முப்தியின் கார் பயங்கர விபத்தில் சிக்கியது. கடவுளின் கருணையால் அவரும், அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் எந்தவிதமான காயங்களுமின்றி உயிர் தப்பினர்" என  குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மெகபூபா முப்தியும் விபத்தில் சிக்கிய தான் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி என  தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in